ஒருவராய் இருவராய்
ஓராயிரம் கனவுகள் சுமந்து
பெண்நேனினும் ஆண்நேனினும்
பொறுப்பாய் வளர்த்து
அன்பினில் அளவு காணாமல்
அதிகமாய் அளித்து
சுயம் சுகம் யாவும் உன்
சுகம் காண தொலைத்து
உழைப்பின் பலனையெல்லாம்
உன் உயர்வில் அமைத்து
இல்லறம் இன்பமாக
இனிய துணை கண்டு
மரண நாள் வரை உன்
மக்களுக்காய் வாழ்ந்து
சுடுகாடு சென்றும் உன் நினைவால் வாடும்
சுயநலமில்லா மக்கள்
நாங்களும் கவிதை எழுதுவோம்ல
முதல் முயற்சி , எதாவது தப்பிருந்தா மன்னிச்சிக்கோங்க
.jpg)
No comments:
Post a Comment