Monday, December 17, 2012

உலகம் அழியுமா




இன்று நான் மிகவும் சோர்ந்திருப்பதால் அலுவலக விடுப்பு எடுத்து வீட்டில் இருக்கிறேன் . நேரம் போகாமல் பதிவுலகில் உலாத்தி கொண்டிருக்கையில்  இந்த பதிவு சிக்கியது . தலைப்பு சுவாரசியமாக இருப்பதால் சிறுது நேரம் கவனத்தை நிறுத்தி படித்தேன் . பதிவு மிக வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததால் அதை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

Hi Friends ,

கடந்த இரண்டு வருடமாக மக்கள் பயந்து கொண்டிருந்த நாள் இதோ இன்று . பல நூறு ஆண்டுகளாக இயற்கை அழிவுகளை துல்லியமாக கணித்த நம்  முன்னோர்களான  மாயன்களின்  காலண்டர் இன்றோடு  முடிகின்றது  . எதோ நிப்ரு என்ற கிரகம் பூமியை தாக்க போவதாகவும் அதனால் பூமியின் துருவங்கள் மாறபோவதாகவும் செய்தி பரவி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன . இந்த வருடம் ஆரம்பம் முதல் வந்த போர் , புயல் , கொலை , கொள்ளை ,ஆட்சி மாற்றம் போன்ற செய்திகள் மக்களை மேலும் பீதி அடைய செய்தது .

பூமியெங்கும் இன்று சிறப்பு பூஜைகளும் , சுவிசேஷ கூட்டங்களும் , தொழுகைகளும் நடைபெற்றுகொண்டிருக்கின்றன . மக்களின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன . 

ஊழல் பெருச்சாளிகளும் , பணக்காரர்களும் தானம் தருமங்கள் செய்து சொர்க்கத்தில் தங்களுக்கான இடங்களை முன் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் . நாத்திகம் பேசும் சிலர் ஆலயங்களில் தென்படுவதாக செய்திகள் வந்தன . 

மக்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வீட்டில் குடும்பத்துடன் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தனர் . பூகம்பம் , சுனாமி போன்ற இயற்க்கை அழிவிலிருந்து  தங்களை காத்து கொள்வது எப்படி ? என்ற நிகழ்ச்சியை புகழ் பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பி கொண்டிருக்கின்றது .

இன்று நாள் முழுவதும் ஓடிவிட்டது , எந்த ஒரு வித்தியாச நிகழ்வுகளும் இல்லை . வழக்கமாக தொலைகாட்சிகள் காட்டும் கொலை,விபத்து , அரசியல் மோதல்  போன்ற செய்திகளும் இன்று இல்லை . மக்கள் திருந்திருப்பார்களோ !!!!

எதோ உலகம் அழிய போகின்றது என்று பயந்து அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தது வீண் , இன்று மற்றுமொரு வழக்கமான நாள் . ஏதோ மாயன் காலேண்டர் முடிய போகுதாம் , போங்கயா போய் பொழப்ப பாருங்க எங்க வீட்டு காலேண்டர் கூட தான் இன்னும் பத்து நாள்ல முடிய போகுது ....

இப்படிக்கு ,
Charles  S 
12/21/2012



நீங்கள் மேற்கண்ட பதிவு 100 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறந்த பதிவரால் எழுதபட்டது . உலகம் இன்று அழியும் , நாளை அழியும் என்று மக்கள் பரப்பும் வதந்தி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .   " இன்று உலகம் சூரிய ஒளியை
இழந்து , பூமி அதன் கோணத்தில் இருந்து எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் "
என்று ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்ததை தொடர்ந்து  விடுப்பு எடுத்து விட்டேன் . இன்று எனக்கும் ஒரு நாள் வீண் .


இப்படிக்கு ,
பிரபாகரன்
11/26/2202


Note:  Visit this link for more info http://www.nasa.gov/topics/earth/features/2012.html


No comments:

Post a Comment