Monday, September 17, 2012

கலாய்


கேலி , கிண்டல் , ஓட்டுவது , பலப் தருவது போல சமீப காலமாக இளைஞ்சர்கள் மத்தியில் பெரிதாக பயன்படும் வார்த்தை "கலாய்ப்பது" .

 18/9/2012 அன்று விஜய் தொலைக்காட்சியில்  'ஆண்-பெண் கலாய்த்தல்'  என்ற தலைப்பில் ஒளிப்பரப்பாகிய "நீயா - நானா " நிகழ்ச்சியின் கருத்து பதிவு தான் இது .



ஆணும் பெண்ணும் எவ்வாறு ஒருவரையொருவர் கலாய்த்து கொள்வீர்கள் என்ற கேள்வியோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது . இருபாலரும் மாறி மாறி தாங்கள் எவ்வாறு மற்றவர்களை கலாயப்போம் என்று  கூறினர் . ஆண்களை விட பெண்களே கலாய்ப்பதில் சிறந்து விளங்கினர் . பொதுவாக இவர்கள் மற்றவர்களை கலாய்க்க பயன்படுத்துவது சினிமா வசனங்களே .

தங்களை எரிச்சலடைய செய்யும் கலாய் எவை ? , தாங்கள் எவ்வாறு மற்றவர்களால் கலாயக்கப்பட்டிர்கள் ? போன்ற  கேள்விகள் கேட்கப் பட்டது . நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை .


இறுதியாக தாங்கள் யாரை எல்லாம் கலாய்க்க விரும்புகிறீர்கள் ? என்று கேட்கப் பட்டது .



பெரும்பாலானோர் தாங்கள் " மிக ஒல்லியாக இருப்போரையும், கருப்பாக 
இருப்போரையும், உடல் பருமனானவர்களையும் , உயரத்தில் மாறுப்பட்டு இருப்பவர்களையும்  எளிதில் கலாய்த்து விடுவோம் " என்று கூறினர் .
வேறு சிலர் " எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டகூடியவர்களை 
கலாய்க்க விரும்புவதாகவும் " கூறினர் . மற்றும் சிலர் " மொழி தெரியாதவர்களை கலாயப்பதாகவும் " கூறினர் .

" என்னடா இது இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண வேறு தலைப்பே இல்லையா  , இப்படி தேவை இல்லாத விஷயத்தை குறித்து எதுக்கு பேசனும்" ன்னு கேள்வி எழுந்தது . இதற்கான விடை விளம்பர இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில் கிடைத்தது  .

No comments:

Post a Comment