நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் பாராட்ட கேட்டு கடந்த வாரம் விஜய் அன்டனி தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளி வந்திருக்கும் " நான் " திரைப்படம் பார்த்தேன் .
சிறு வயதில் தன் அம்மாவின் ஒழுங்கினமான செயலால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு தள்ளபடுகிறார் கார்த்திக் . படிப்பின் மீது நிறைய ஆர்வம் கொண்ட கார்த்திக் , சீர்திருத்தப்பள்ளியில் இருந்தபடியே தன் படிப்பை தொடர்கிறார் . விடுதலை ஆகி வெளியே வரும் அவர் தன்னுடன் பயணம் செய்து எதிர்பாரதவிதமாக விபத்தில் பலியான சல்மான் என்பவற்றின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்குள் நுழைகிறார் .
அங்கு அவரிடம் பணக்கார வீட்டு பிள்ளையான அசோக் நண்பராகிறார் .
தன் வீடு வாடகை கட்ட இயலாததால் கார்த்திக்(சல்மான்) அசோகுடனே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது . ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு தன்னுடன் தங்கியிருப்பவன் சல்மான் இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது . அப்பொழுது ஏற்ப்பட்ட கை தகராறில் அசோக் பரிதாபமாக உயிரிழக்கிறார் .
அசோக்கின் உடலை புதைத்துவிட்டு , கார்த்திக் (சல்மான்) அசோக்கின் குரலில் பேசி அசோக்கின் நண்பர்களையும் , பெற்றோரையும் சமாளிக்கிறார் . ஒரு கட்டத்தில் அசோக் காணமல் போய்விட்டார் என்கிற சந்தேகம் போலீசிற்கு வர , கார்த்திக் படிப்பை தொடர்ந்தாரா இல்லையா என்பதே ' நான் ' திரைபடத்தின் மீதி கதை .
படத்தில் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயங்கள் ஜீவா ஷங்கரின் கதை மற்றும் திரைக்கதை , அடுத்த காட்சி என்ன வென்று ரசிகர்களை ஊகிக்க
முடியாமல் செய்திருப்பதே படத்தின் மிக பெரிய பலம் .
விஜய் அன்டனி கார்த்திக்காக வாழ்ந்திருக்கிறார் . சித்ததர்த்தை போல
மிமிக்ரி செய்வதாகட்டும் , ATM இல் பணம் எடுக்கும் பொது கடவு எண்ணை மறைமுகமாக நோட்டமிடுவது , தன் போலி அப்பாவையும் தன்னை சீண்டும் கல்லூரி சீனியரையும் ஒரு சேர தாக்குவது என தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கான தன் முத்திரையை பலமாய் பதித்திருக்கிறார் .
நடிப்பு மட்டுமல்லாது இசை மற்றும் பின்னணி இசையிலும் நம் மனதை கவர்கிறார் விஜய் அன்டோனி சபாஷ் !!!
ரூப மன்சுரி , அனுயா , கிருஷ்ணமூர்த்தி , சித்தார்த்தின் பெற்றோர் , சீர்திருத்த பள்ளி வார்டன் , சல்மானின் வயதான தந்தை என அனைவரும் பாத்திரம் அறிந்து பளிசிட்டிருக்கின்றனர் ..
கிளைமாக்ஸ் காட்சி படத்தை தூக்கி நிறுத்துகிறது .
மொத்தத்தில் " நான் " நம் மனதில் நிற்பவன் .

No comments:
Post a Comment